தேசத்தின் காப்பாளனாக திகழும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், இலங்கையில் சகலவிதமான சிவில் விமானநிலையங்களை கொண்டு நடாத்தும் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரச நிறுவனமான விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்திற்கு காப்புறுதி சேவை வசதிகளை வழங்க மீண்டும் ஒரு முறை தெரிவாகியுள்ளது.
இக்காப்புறுதி உறுதிப்பத்திரம் மற்றும் உடன்படிக்கை கைச்சாத்திடலின் உத்தியோகப்பூர்வ நிகழ்வு கடந்த வாரம் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவன வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்விற்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவன தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்தசிரி மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் தலைவர் திரு. ஜகத் வெல்லவத்த ஆகியோர் உட்பட முகாமைத்துவ குழாமினர் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்திற்கு ஒரு தசாப்த காலத்திற்கும் அதிகமாக காப்புறுதி சேவைகளை வழங்கியதோடு இம்முறை விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் பொறுப்பு வலையமைப்பு, மோட்டார் வண்டி குழும காப்புறுதி, இயந்திர மற்றும் ஆலை தொடர்பான காப்புறுதி, தனிநபர் அவசர விபத்து காப்புறுதி போன்ற காப்புறுதி சேவைகளை வழங்கவுள்ளது.
நிறுவனமொன்றின் காப்புறுதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நிரந்தர நிதி நிலையினைக் கொண்ட ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ், ஏராளமான தேசிய செயற்றிட்டங்களுக்கு காப்புறுதி சேவைகளை வழங்கி உள்ளதோடு நவீன காப்புறுதித் தீர்வுகளுடன் தேசத்தை பாதுகாப்பதற்கு என்றும் முன்னணியில் நிற்கும் ஒரு நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM