களுத்துறை வடக்கு - வஸ்கடுவ பகுதியில் ஐஸ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களோடு சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை பிற்பகல் தனியார் சிற்றுண்டிச்சாலையொன்றில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிற்றுண்டிச்சாலையிலிருந்து 14 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 22 கிராம் கேரள கஞ்சா , 5 அடி உயரமான கஞ்சா செடி, மதுபான உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் 2, முச்சக்கர வண்டி 1 மற்றும் 64,000 ரூபா பணம் ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 20, 27, 30 மற்றும் 37 வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM