ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் உயர்மட்ட நோயாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து இரண்டாவது தடவையாக JCI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

08 Sep, 2020 | 12:47 PM
image

ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்து, தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக JCI சான்றிதழைப் பெற்றுக் கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் காணப்படும் வைத்தியசாலைகளின் தரத்தை உறுதி செய்து வழங்கப்படும் சான்றிதழாக இது அமைந்திருப்பதுடன், வைத்தியசாலைகளில் சிறந்த தரம் மற்றும் பாதுகாப்புடனான நோயாளர் பராமரிப்பு பேணப்படுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. கடுமையான மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதுடன், நோயாளர்களை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு, சுகாதார பராமரிப்பு, தரம் மற்றும் தர முகாமைத்துவ கட்டமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் Gold Seal of Approval® வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு தடவை JCI சான்றிதழ் புதுப்பிப்பு மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்ற ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் தர மீளாய்வு விஜயத்தின் போது, 90 சதவீதத்துக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று, மீள்சான்றளிப்பை வைத்தியசாலை பெற்றிருந்தது.

தாதியியல் நிபுணர், வைத்தியர்கள் மற்றும் வசதிகள் நிபுணத்துவம் ஆகியவற்றுடன் சுகாதார கட்டமைப்புகளில் உலகாளவிய ரீதியில் தசாப்த கால அனுபவத்தைக் கொண்டவர்கள் JCI மதிப்பாய்வு அணியில் அடங்கியிருந்தனர். சகல சிகிச்சை மற்றும் செயற்பாட்டு செயன்முறைகளையும் மீளாய்வுக்குட்படுத்தி இந்த சான்றிதழை வழங்கியிருந்தனர். ஆசிரி சென்ரல் வைத்தியசாலையின் உயர் ஒழுக்கப் பெறுபேறுகள் என்பதனூடாக, நோயாளர்களின் உயர்மட்ட பாதுகாப்பு நியமங்கள் மற்றும் பராமரிப்பு போன்றவற்றில் காண்பிக்கும் ஈடுபாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

புதுப்பிப்பு சான்றிதழை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர். மஞ்சுள கருணாரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “ஆசிரி சென்ரல் வைத்தியசாலையைப் பொறுத்தமட்டில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக அமைந்துள்ளது. எமது முயற்சிகளுக்கு இந்த உயர்ந்த தரப்படுத்தலை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். வைத்தியசாலை நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சைகள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகின்றமைக்காக கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். தினசரி செயற்பாடுகளில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் அளவிடக்கூடிய நியமங்களை செயற்படுத்துவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இதை உறுதி செய்துள்ளது. இந்த சான்றிதழினூடாக, வைத்தியசாலை பேணும் கடுமையான, குறிப்பிட்ட மற்றும் அளவிடக்கூடிய தேவைகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் உயர்ந்த நிலையை எய்துவதற்கு தூண்டுவதாக அமைந்துள்ளது.” என்றார்.

சுகாதார பராமரிப்பு தேவைகள் தொடர்பில் ஆசிரி சென்ரல் வைத்தியசாலை உண்மையில் புரிந்துணர்வைக் கொண்டிருப்பதுடன், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் தரம் வாய்ந்த பராமரிப்பு சிகிச்சையை வழங்குகின்றது. முன்னோடியான வைத்தியசாலை எனும் வகையில், நோயாளர் பராமரிப்பை மையப்படுத்தி இயங்கும், ஆசிரி சென்ரல் வைத்தியசாலை, நோயாளர்களுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதுடன், உயர் தொழில்நுட்ப சத்திர சிகிச்சை தீர்வுகளையும் வழங்குகின்றது. இந்த சிகிச்சைகளை பெற்றுக் கொடுப்பதற்காக அனுபவமும் முறையான பயிற்சிகளையும் பெற்ற மருத்துவ அதிகாரிகளையும், தாதியியல் அணியையும் தன்வசம் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58