(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் இன்று வாக்கு மூலம் அளிக்க ஆஜராகினர்.
ஆணைக் குழ்வினினால் அனுப்பட்டிருந்த அறிவித்தல் பிரகாரம் அவ்விருவரும் இன்று காலை 9.30 மணியளவில் அங்கு ஆஜராகியிருந்த நிலையில் நீண்ட வாக்கு மூலங்கள் அவர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன,
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் 6 மணி நேரமும், முஜிபுர் ரஹ்மானிடம் 4 மணி நேரமும் இந்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அதன்படி முஜிபுர் ரஹ்மான் பி.ப. 1.30 மணியளவிலும், ஹிஸ்புல்லாஹ் 3.30 மணியளவிலும் வாக்கு மூலம் வழ்னக்கிய பின்னர் வெளியேறிச் சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM