இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகர மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கர கத்திக் குத்து சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஒரு கொலை மற்றும் ஏழு கொலை முயற்சிகள் என்ற குற்றச்சாட்டுக்கு அமைவாகவே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கத்திக் குத்து தாக்குதலானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நகர மையத்தின் நகர பகுதியில் சுமார் 90 நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 32 வயதுடைய பெண்ணொருவரும், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மேலும் ஐவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே சம்பவம் நடத்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் கத்திக் குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸார் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுத்த விசாரணையில் அந் நாட்டு நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM