வாயில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ப்ரோக்கோலி என்ற காய்கறியில் இருப்பதாக பென்சில்வேனியாவை சேர்ந்த பீட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
பொதுவாகவே முட்டைக்கோஸ், அருகம்புல் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவைகளை உணவில் குறைவாகவே சேர்ப்போம். இவை ஆரோக்கியமானவை என்றாலும் இவற்றை குறைவாகவே உணவில் பயன்படுத்துவோம் அல்லது இதன் சத்துகளை அதிகளவில் வேக வைப்பதன் மூலமாகவோ அல்லது மிக்ஸியில் அடித்து அதன் சத்துக்களை ஆவியாக அனுமதித்த பின்னர் உண்போம். அப்படி செய்யாமல் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தலின் படி மேற்கண்ட காய்கறிகளை குறிப்பாக ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிட்டால், வாய்புற்று நோய் முழுவதுமாக தடுக்கப்படுகிறது.
வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்ஜேரி, கீமோ தெரபி, ரேடியேசன் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வோம். இதன் மூலம் அவர்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். ஆனால் புற்றுநோயை முழுதாக அகற்றப்படவேண்டும் என்றால் உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் காரணிகளை அழிக்கவேண்டும். தற்போது அந்த பணியை ப்ரோக்கோலி மேற்கொள்வதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃப்ரோபேன் இத்தகைய புரதங்களை உருவாவதை தடுப்பதுடன் அதனை அழிக்கவும் செய்கிறது. மேலும் இது குறித்த ஆய்வுகள் தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள்
வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும். வாயில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும். நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமாகக் காணப்படும்.
என்ன காரணம்?
புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலினவேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையில் புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை.
எதனை தவிர்க்கவேண்டும்?
ரெட் மீட் எனப்படும் மட்டன், பீஃப் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் புற்றுநோயைத் தூண்டும் காரணிகள் அதிகம்.
எதனை சாப்பிடலாம்?
சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக ஆண்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த முட்டைகோஸ், ப்ரோக்கோலி, அருகம்புல் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
டொக்டர் V.சுப்ரமணியன்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM