கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று 06.09.2020 மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சா க்கட்டுகளையும் மற்றும் பக்கட் செய்ய வைத்து இருந்த கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக இரகசியமாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா பக்கட் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM