சமூகவலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி; பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை

Published By: Vishnu

05 Sep, 2020 | 04:31 PM
image

(செ.தேன்மொழி)

இணையத்தள விளம்பரங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் திட்டமிட்ட குழு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இணையதளத்தின் ஊடாக விளம்பரங்களை செய்து நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு கணணி பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

தாய்லாந்தில் தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவித்து விளம்பரங்களை செய்து நிதி மோசடியில் ஈடுபட்டு வரும் குழு தொடர்பில் ஹொங்கொங்கில் உள்ள இலங்கை தூதரங்கம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளது.

நாட்டுக்குள்ளும் இவ்வாறான மோசடிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற திட்டமிட்ட குழுவினர் இணையத்தின் ஊடாக ஒருவரை தொடர்பு கொண்டு , அவருக்கு கார் ஒன்றை வெற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்து , அந்த காரை பெற்றுக் கொள்வதற்காக தாங்கள் வழங்கும் வங்கி கணக்குக்கு குறித்தவொரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு தெரிவித்து மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதிர்ஷ்ட சீட்டிலிப்பின் ஊடாக பணத்தை வெற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தபாற்சோவையின் மூலம் கடிதமொன்றை அனுப்பி அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக தங்களால் அனுப்பப்பட்டுள்ள வங்கி கணக்குக்கு பணம் வைப்பிலிடுமாறு குறிப்பிடுதல் போன்ற திட்டமிட்ட மோசடிகள் இடம் பெற்று வருவதுடன் , முகப்புத்தகங்களின் ஊடாகவும் இத்தகைய மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

முகப்புத்தகத்தின் ஊடாக அறிமுகமாகும் இனந்தெரியாத நண்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து பரிசில்களை பெற்றுக் கொள்ளுதல் , அதனை அவர்கள் அனுப்புவதற்கு அனுமதித்தல் , அந்த பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக சுங்க வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு வங்கி கணக்கில் பணவைப்பிலிடுமாறு தெரிவித்தல் போன்ற மோசடிகள் இடம்பெறுவதுடன் , திருமண வரன்கள் தொடர்பில் கூறப்படும் போலி தகவல்களை தெரிவுக்கும் நபர்களை நம்பி அவர்களுக்கு பணத்தை வைப்பிலிடுதல் போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கனடாவுக்கு செல்வதற்கு வீசா பெற்றுக் கொடுப்பதாக குறிப்பிட்டு 60 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த தம்பதியினரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மேற்படி விவகாரங்கள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , இவ்வாறான நபர்கள் தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுவதுடன், இனந்தெரியாத நபர்களை நம்பி பணம் வைப்பிலிடுவதையும் தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் வலியுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22