கிழக்கு லடாக் பிராந்தியத்தில் தங்களது சர்ச்சைக்குரிய எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்களைத் தீர்க்க இந்திய மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்ய தலைநகரில் சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மொஸ்கோவில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கே ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமாரும் ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேச வர்மாவும் இதன்போது உடனிருந்தனர்.
சீன பாதுாப்புத்துறையின் வேண்டுகோளின்படியே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு, இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள், இதன்போது முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அலுவல்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லை விவகாரத்தில், இரு தரப்பும் முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்டபடி அவரவர் நிலைகளிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அந்த ஈடுபாட்டை உண்மையாக செயல்படுத்த வேண்டும் என்றும் இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM