(நா.தனுஜா)
அரசியலமைப்பின் 18 வது திருத்தத்திற்கு எதிரான 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் தன்னால் ஆற்றப்பட்ட உரையை மீள நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அதே வரலாறு மீளத்திரும்பப்போகிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சுமந்திரன், அதில் 'அரசியலமைப்பின் 18 வது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தேன்' என்று சுட்டிக்காட்டி அவரால் ஆற்றப்பட்ட உரையில் காணொளியையும் அதில் இணைத்திருக்கின்றார். அதனுடன் 'வரலாறு தற்போது மீளத்திரும்பிக்கொண்டிருக்கிறதா?' என்றும் அவர் அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM