நைஜீரியாவின் மத்திய மாநிலமான நைஜரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 22 பேரைக் கொன்றதாக மாநில பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
பலியானவர்கள் உள்ளூர் விழிப்புணர்வு குழுக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சேர்ந்தவர்கள்.
ஆயுதமேந்திய குற்றவியல் கும்பல்களின் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி தாரிகள் டூக்கு நகரில் மோட்டார் சைக்களில் வந்து குடியிருப்பாளர்களை கடத்த திட்டமமிட்டுள்ளனர். அதன் பின்னர் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள், தாக்குதல் நடத்தியவர்களுடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஓய்வுபெற்ற கேணல் கபிரு மொஹமட் மைக்கூண்டி சுட்டிக்காடாடியுள்ளார்.
புதன்கிழமை மாலை ககாரா நகரில் ஒரு வங்கி மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வரை சுட்டுக்கொன்றனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் துப்பாக்கி ஏந்தியவர்களும் கொல்லப்பட்டதாக நைஜர் மாநில அரசு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர், இருப்பினும் அந்த எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை.
நைஜர் மாநிலம் மத்திய மற்றும் வடமேற்கு நைஜீரியாவில் பல மாநிலங்களில் ஒன்றாகும், அங்கு ஆயுதமேந்திய குற்றவியல் கும்பல்கள் அடிக்கடி கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முன்னெடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM