(செய்திப்பிரிவு)
4 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் பாணந்துறை - நிவிடாவ பகுதியிலுள்ள வீடான்றில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்கேநபர்களிடமிருந்து 15 கிராம் அளவிலான போதைப்பொருள், கைத்தொலைபேசிகள் 4 மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
முகத்துவாரம் - முரவத்த பகுதியைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான பெண்கள் இருவர் பாணந்துறை - நிவிடாவ பகுதியிலுள்ள வீடொன்றிற்கு வந்து அங்கிருந்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பாணந்துறை - தெற்கு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம். எஸ். குமாரசேன தெரிவித்தார்.
இவ்வாறு முகத்துவாரம் - முரவத்த பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 55 வயதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர்களான குறித்த சகோதரிகளில் ஒருவரின் கணவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவரெனவும் அவர் வழங்குகின்ற போதைப்பொருட்களை குறித்த சகோதரிகள் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM