(இராஜதுரை ஹஷான்)
பலமான அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவே ஜனாதிபதிக்கு முழுமையான நிறைவேற்றுஅதிகாரம் 20வது திருத்தம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசியமைப்புஉருவாக்கத்தில் அனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் உள்வாங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கையை ஜனநாயக இடதுசாரிமுன்னணி சார்பில் அரசியலமைப்பு வரைபு தொடர்பான விசேட குழுவினரிடம் முன்வைத்துள்ளோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும்குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 20வது திருத்தம் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. 19வதுதிருத்தம் பலவீனமான அரச நிர்வாகத்துக்கு பிரதான காரணியாக அமைந்தது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்களுக்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்ற முரண்பாடுகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறான முரண்பாடுகள் 20வது திருத்தத்தில் ஒருபோதும் ஏற்படாது.
முத்துறை அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளதால் அரச நிர்வாகம் பலமாக செயற்படும் என எதிர்பார்க்கிறோம். அரசியலமைப்பின்18வது திருத்தத்தை கடந்த அரசாங்கம் முறையற்ற விதமாகவே இரத்து செய்தது. திருத்தம் இரத்து செய்யப்பட்டு புதிய திருத்தம் கொண்டு வருவதற்கான காரணிகள் குறிப்பிடப்படவில்லை.
அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியின் காரணமாகவே 19வது திருத்தம் நிறைவேற ஆதரவு வழங்கினோம்.
ஒரு வாரம் என்று காலக்கேடுவிதித்தவர். 4 ஆண்டு காலம் கடந்தும் 20வது திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அரசியலமைப்பின் 19வது திருத்தம் நல்லாட்சியின் இலட்சினம் என பெருமைப்பட்டுக் கொண்டவர் ஒக்டோபர் 26 அரசியல் நெருக்கடிக்கு பிறகு 19 வது திருத்தம் சாபக்கேடு என கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.
19வது திருத்தம் நடைமுறையில்பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. முத்துறை அதிகாரங்களும் யாருக்கு என்று பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.
நாட்டுக்கு பொறுந்தும் விதத்திலான அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவோம் என இரண்டு பிரதான தேர்தல்கள் ஊடாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி 20வது திருத்தம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM