(ஆர்.ராம்)
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பொறிமுறை அமைக்கப்படும் போது சர்வதேசத்தின் பங்களிப்பு குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படுமென பிரதான எதிர்க்கட்சியான தமிழ்தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அரசாங்கம் முன்னெடுக்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறையானது பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையவேண்டியது அவசியமானது என வலியுறுத்தியுள்ள அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தமது பங்களிப்புக்கள் தொடருமெனவும் உறுதிபடக் கூறியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜங்க செயலாளர் நிஷா பிஸ்வால், ஜனநாயகம், மனித உரிமை தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜங்கச் செயலாளர் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோருக்கும், எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது.
இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM