கதிர்காமம் விசேட அதிரடிப் படையினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையொன்றுக்கருகில் சந்தேகத்திற்கிடமாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கதிர்காமம் விசேட அதிரடிப்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 660 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், திஸ்ஸமஹாராம அரிசி விற்பனை நிலையத்திற்கருகில் 5 கிராம் ஐஸ் போதைப்பொருளை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது பன்னேகமுன - பொரலுவௌ வீதியில் வைத்து 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM