காபூலின் நிர்வாகம் தலிபான் கைதிகளை விடுவிப்பதை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அரசாங்க பேச்சுவார்த்தையாளர்கள் வியாழக்கிழமை கட்டார் தலைநகருக்கு தலிபானுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு புறப்படவுள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானிய பேச்சுவார்த்தையாளர்கள் அணி தோஹாவுக்கு நாளை புறப்படுவார்கள் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் (எச்.சி.என்.ஆர்) தலைவராக இருக்கும் அப்துல்லா அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் பிரைடூன் கவ்ஸூன் ரோய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராவதற்கு முன்னதாக தோஹாவிற்கு ஒரு "சிறிய தொழில்நுட்பக் குழு" அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
320 கைதிகள் அடங்கிய இறுதிக் குழுவை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என்று தலிபான் கோரியது.
பெப்ரவரி மாதம் தலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கைதிகளின் விடுவிப்பு அமைந்துள்ளது.
இந் நிலையில் இறுதி இறுதி 400 தலிபான் கைதிகளின் விடுதலையை காபூல் கண்டித்துள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட சில மேற்கத்திய அரசாங்கங்களும் தலிபான் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்தன.
எனினும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இந்த வாரம் மேலும் 200 பேரை விடுவித்துள்ளது. மொத்தமாக 5,000 தலிபான் கைதிகளில் தற்போது 120 பேர் கைதிகள் மாத்திரம் எஞ்சியுள்ளனர்.
தலிபான் கைதிகளின் விடுவிப்பின் ஒரு பகுதியாக 1,000 அரசாங்க படையினரை விடுவிக்குமாறும் ஆப்கானிய அரசாங்க படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM