ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் காணாமல்போனோர் குறித்து வலியுறுத்துவது என்ன ?

Published By: J.G.Stephan

31 Aug, 2020 | 03:53 PM
image

(நா.தனுஜா)
இலங்கையில் காணாமல்போனோரின் உறவினர்களும் நண்பர்களும் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிவருகின்றனர். 

அவர்களுக்கான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சாட்சியங்கள் மற்றும் இவ்விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகுவோர் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகம் வலியுறுத்தியிருக்கிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான  வதிவிடப்பிரதி நிதி ஹனா சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான எமது முழுமையான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம். 

இவ்வாறானதொரு நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருபவர்கள், தமது பணியைத் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

மேலும் காணாமல்போனோரின் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தொடர்ந்தும் முன்னணியில் நின்று செயற்படும் பெண்கள் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள் என்பதுடன், அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 

அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சாட்சியங்கள் மற்றும் இவ்விவகாரத்தைச் சட்டரீதியாக அணுகுவோர் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பினை உறுதிசெய்வதும் அவசியமாகும்.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறது:

'யார் யாருடைய கதி குறித்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றதோ, அவர்கள் மீதான அவதானம் செலுத்தப்பட வேண்டிய தினமாக சர்வதேச காணாமல்போனோர் தினம் இருக்கின்றது. 

இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களைத் தொலைத்துவிட்டு அவர்களுக்காகக் காத்திருப்போருக்கு இந்த நாளில் எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59