(எம்.மனோசித்ரா)
புதிய அரசியலமைப்பில் நீதி , அரச , பொலிஸ் மற்றும் தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கபே அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் ,
ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் ஆணைக்குழுக்கள் பற்றி வௌ;வேறு நிலைப்பாடுகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வினை வழங்குவது அதிகாரங்களை நீக்குவதன் மூலமல்ல. அதிகாரங்களை பலப்படுத்துவதன் மூலமாகும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் மூலம் நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே ஆணைக்குழுக்கள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கான தீர்வுகளை வழங்குவது ஜனநாயகத்தை மதிக்கின்ற அரசாங்கத்தின் கடமையாகும்.
கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் எவ்வித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக தேர்தலை நடத்த முடிந்தமைக்கான காரணம் தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட்டமையாலே ஆகும். ஜனநாயக நாட்டில் பிரஜையொருவரின் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM