(செய்திப்பிரிவு)
காலி - மிட்டியாகொட மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற துவிச்சக்கர வண்டிகள் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஹிக்கடுவை - மலவென்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட 10 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் அவர் போதைக்கு அடிமையானவர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு திருடுகின்ற துவிச்சக்கர வண்டிகளை குறைந்த விலையில் விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு போதைப்பாருட்களை கொள்வனவு செய்வதை சந்தேகநபர் வழக்கமாகக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் மிட்டியாகொட, கரந்தெனிய, அஹூன்கல்ல மற்றும் அம்பலாங்கொடை பகுதிகளில் இதுவரையில் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM