நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் 2 பிள்ளைகளின் தந்தை  பலி - பதுளையில் சம்பவம்  

Published By: Digital Desk 4

30 Aug, 2020 | 07:49 PM
image

பதுளை, பசறையில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி (கட்டுத் துவக்கு) தவறுதலாக இயங்கி வெடித்ததில் சுனில் சாந்த (வயது 29) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை பலியானதுடன், அவருடைய இரண்டரை வயது மகள் படுகாயமடைந்துள்ளார்.

பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெமேரியா தோட்ட, மாத்தென்ன பிரிவுக்கு அண்மையில் அமைந்துள்ள ரிட்டிக்காதோவ கிராமத்தில் உள்ள வீடொன்றில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி (கட்டுத் துவக்கு) தவறுதலாக இயங்கி வெடித்ததில் சுனில் சாந்த (வயது 29) என்ற குடும்பஸ்தர் பலியானதுடன், அவருடைய இரண்டரை வயது நிரம்பிய மகள் படுகாயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.   இவ்வெடிப்பு சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சம்பவ தினமிரவு வீட்டிற்கு வெளியே ஏதோ சத்தம் கேட்கவே குடிபோதையில் இருந்த குடும்பஸ்தர் தனது இரண்டரை வயது நிரம்பிய மகளை கையில் தூக்கிக்கொண்டு சமையலறை பகுதியில் இருந்த துப்பாக்கியை எடுத்து நிலத்தில் தட்டிக் கொண்டு வெளியில் செல்லும் போதே துப்பாக்கி இயங்கி குறித்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. 

இந்நிலையில் படுகாயமடைந்த குறித்த இருவரும் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதன் போதே குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22