(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் , சுகாதாரத்துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் ஏனைய வேலைத்திட்டங்களுக்கும் இலங்கைக்கு உதவ சீனா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹூ வெய் ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு அண்மையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன் போது கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் அதனை ஒழித்தல் என்பவற்றுக்காக ஜனாதிபதி , பிரதமர் , சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மற்றும் செயற்பாடுகளை பலப்படுத்தல் , இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கொவிட்-19 பரவல் காரணமாக சீனா பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த போது இலங்கை வழங்கிய உதவிகளுக்கு சீன ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பதில் தூதுவர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
அத்தோடு கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் சீனா அவதானம் செலுத்தியுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் , சுகாதாரத்துறையை மேம்படுத்தல் உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் ஏனைய வேலைத்திட்டங்களுக்கும் சீனா இலங்கைக்கு உதவும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் வாழ்கின்ற சீன மக்கள் வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கியதோடு தனிமைப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கும் ஒத்துழைத்தமையை தாம் மதிப்பதாக அமைச்சர் பவித்திரா தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM