புத்தளத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த பெருந்தொகை மஞ்சள் மீட்பு ; 6 பேர் கைது

Published By: Digital Desk 4

30 Aug, 2020 | 12:39 PM
image

புத்தளம் கற்பிட்டி, வெள்ளந்தீவு பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 1396 கிலோகிராம் மஞ்சள் நேற்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி 43 இலட்சத்து 19 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

குறித்த மஞ்சள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சொகுசு கார் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம்   தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52