இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை பதவி விலகுமாறு வலியுறுத்தி இவ் வார இறுதியில் ஜெசலேமில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக் கணக்கான எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊழல் விசாரணைகளையும், கொரோனா வைரஸ் நெருக்கடியை தவறாகக் கையாண்ட குற்றச்சாட்டுக்காக அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறி இஸ்ரேலில் கடந்த 11 வாரங்களாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சனிக்கிழமையன்று ஜெருசலேமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20,000 பேர் பங்கேற்றதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி அமைப்புகளில் வெளியான படங்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் நெத்தன்யாகுவின் இல்லத்திற்கு அருகிலிருந்து பொலிஸாரால் இழுத்துச் செல்லும் காட்சிகளையும் வெளிக்காட்டியுள்ளது.
இது தவிர இஸ்ரேலின் பிற பகுதிகளிலும் சிறிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஓவர் பாஸ்கள் மற்றும் ஆடம்பர நகரமான சீசரியாவில் உள்ள நெதன்யாகுவின் தனியார் வீட்டிற்கு வெளியேயும் இவ்வாறான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் நடந்த பிரதான பேரணியில், எதிர்ப்பாளர்கள் நகரின் நுழைவாயிலில் கூடி நெத்தன்யாகுவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டக்கார்கள் எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்றைக் குறிக்கும் இஸ்ரேலிய கொடிகள் மற்றும் கறுப்புக் கொடிகளை வைத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM