வெளியிலிருந்து சேவையாற்றுவதையே விரும்புகின்றேன் - பசில் ராஜபக்ஷ

29 Aug, 2020 | 06:42 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்களாயின் அது தொடர்பில் ஆராய தயாராக இருக்கின்றேன். எனினும் பாராளுமன்றத்திற்கு வெளியில் இருந்து நாட்டுக்கான சேவையை ஆற்றுவதையே சிறப்பானதாகக் கருதுகின்றேன். அதனையே நான் விரும்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பாராளுமன்றத்தை விட அதற்கு வெளியிலிருந்து சேவை செய்வதை சிறப்பாகக் கருதுகின்றேன். எனினும் தேவை ஏற்படின், நான் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்பினால் அது பற்றி சிந்திக்கலாம். ஆனால் வெளியிலிருந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதையே விரும்புகின்றேன்.

இதே வேளை புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ ,

அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்காவே மக்கள் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். அதற்காகவே நாமும் மக்களிடம் மூன்றில் இரண்டைக் கோரினோம். எனவே அதனைச் செய்யாவிடின் மூன்றில் இரண்டைப் பெற்றது அர்த்தமற்றதாகிவிடும்.

பாராளுமன்றத்தில் 113 என பெரும்பான்மை கிடைத்திருந்தாலே எமக்கு போதுமானது. ஆனால் 150 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்குமாறு மக்கள் எமக்கு ஆணை வழங்கியிருக்கின்றனர். எனவே புதிய அரசியலமைப்பிற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46