அந்தமானில் ‘கிரேட் அந்தமான் மக்கள்’ என்று அழைக்கப்படும் பழங்குடியினர் தற்போது 59 பேர் மாத்திரமே வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது இவர்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கான சுகாதாரத் துறை இணைச் செயலாளரும், அப்பிராந்தியத்திற்கான கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியுமான வைத்தியர் அவிஜித் ராய் தெரிவித்துள்ளதாவது,
ஸ்ட்ரைட் தீவில் வசிக்கும் 34 பேர், போர்ட்பிளேரில் வசிக்கும் 24 பேர் என கிரேட் அந்தமான் பழங்குடியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் போர்ட்பிளேரில் வசிக்கும் 5 பேருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஸ்ட்ரைட் தீவில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி.பந்த் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM