ஜனாதிபதிக்கு முதலாவது பொப்பி மலர் அணிவிப்பு

28 Aug, 2020 | 05:07 PM
image

(செய்திப்பிரிவு)

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அணிவிக்கப்பட்டது. 

முன்னாள் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவினால் முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

உலகப் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூர்ந்து இலங்கை முன்னாள் படை வீரர்களின் சங்கம் 1944 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பொப்பி மலர் தினத்தை ஏற்பாடு செய்து வருகிறது.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் யுத்தத்தில் இறந்த படை வீரர்களின் குடும்பத்தினருக்கும் அங்கவீனமுற்ற படை வீரர்களின் நலன் பேணலுக்காகவும் செலவிடப்படுகிறது.

இலங்கை முன்னாள் படை வீரர்கள் சங்கம் கொவிட்-19 நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா நன்கொடையை ஜனாதிபதியிடம் கையளித்தது. 

சங்கத்தின் பொதுச் செயலாளர் கேர்ணல் அஜித் சியம்பலாப்பிட்டிய , பொருளாளர் மேஜர் ஷாந்திலால் கங்கானம்பகே பொப்பி நினைவு தினக்குழுவின் தலைவர் கப்டன் குமா கிரிந்தே ஆகியோர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47