இந்தியாவிலிருந்து நாடு திரும்பினர் 35 அகதிகள்

Published By: Robert

13 Jul, 2016 | 09:38 AM
image

இலங்கை தமிழ் அக­திகள் 35 பேர் நேற்று இந்­தி­யா­வி­லி­ருந்து நாடு­தி­ரும்­பி­யுள்­ளனர். 16 குடும்­பங்­களைச் சேர்ந்த 35 பேரே தமது சுய விருப்பின் பேரில் நாடு திரும்­பி­யுள்­ளனர். குறித்த அக­தி­க­ளுக்­கான பயண ஏற்­பா­டு­களை ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் மேற்­கொண்­டுள்­ளது. இவர்­களில் 11 ஆண்­களும் 24 பெண்­களும் அடங்­கு­கின்­றனர்.

அவர்­களில் 8 குடும்­பங்­களைச் சேர்ந்த 17 பேர் மது­ரை­யி­லி­ருந்து மிஹின்­லங்கா விமா­ன­ சே­வை­யூ­டாக நேற்று மு.ப. 9.15 மணி­ய­ள­விலும் ஏனைய 8 குடும்­பங்­களைச் சேர்ந்த 18 பேர் சென்­னை­யி­லி­ருந்து மிஹின்­லங்கா விமா­ன­சே­வை­யூ­டாக பகல் 12.05 மணி­ய­ள­விலும் இலங்­கையை வந்­த­டைந்­துள்­ளனர்.

நாடு திரும்­பி­யுள்ள அக­தி­க­ளுக்­கான மீள்­ச­மூக ஒருங்­கி­ணைப்­புக்­கான ஏற்­பா­டு­க­ளையும் ஐக்­கிய நாடு­களின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் மேற்­கொண்­டுள்­ளது. குறித்த அக­திகள் மன்னார், வவு­னியா, யாழ்ப்­பாணம், முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வுள்­ளனர்.

இது தொடர்பில் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சின் செய­லாளர் வே.சிவ­ஞா­ன­சோதி தெரி­விக்­கையில், இந்­தி­யா­வி­லுள்ள இலங்கை அக­தி­களை சுய­வி­ருப்பின் பேரில் கட்டம் கட்­ட­மாக நாட்­டுக்கு அழைப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ ளது.

2011 ஆம் ஆண்­டி­லி­ருந்து 4 ஆயி­ரத்து 835 இலங்கை தமிழ் அக­திகள் தமிழ்நாட்­டி­லி­ருந்து நாடு திரும்­பி­யுள்­ளனர். மேலும் இந்­தி­யா­வி­லுள்ள 109 முகாம்­களில் 64 ஆயிரம் இலங்கை அக­திகள் தங்­கி­யுள்­ளனர். அவர்­களில் ஏரா­ள­மானோர் நாடு திரும்­பு­வ­தற்­கான விருப்­பத்தை தெரி­வித்­துள்­ளனர்.

நாடு திரும்பும் அக­தி­க­ளுக்­கான சலு­கை­களை வழங்­கு­வ­தற்கு அமைச்சர் சுவா­மி­நாதன் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்ளார். அதன் பல­னா­கவே அதி­க­ள­வான அக­திகள் நாடு திரும்­பு­வ­தற்­கான விருப்­பத்தை தெரி­வித்­துள்­ளனர். மேலும் நாடு திரும்பும் அக­திகள் தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு இலட்சம் ரூபா வரை­யி­லான உதவு தொகையும் வழங்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் அவர்­க­ளுக்கு ஆறு மாத காலத்திற்கு உலர் உணவுப் பொருட் களை வழங்குவதற்கும் அரசாங்கம் நட வடிக்கை எடுத்துள்ளது. மேலும் நிர்மா ணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் நாடு திரும்பும் அகதிகளுக்கு வீடு வழங்கு வதற்கான நடவடிக்கையும் மேற்கொள் ளப்படும் எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11