பலாங்கொடை தியவின்ன கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது குடியிருப்பில் தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் வசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்ந்த மரத்தின் மீது ஏறி நேற்று (28.08.2020) போராட்டம் செய்துள்ளார்.
குறித்த தாயார் அரசுக்கு சொந்தமான வனவள பகுதியில் உள்ள வீடு ஒன்றை அமைத்து நீண்ட காலமாக குடியிருந்து வந்தமையால் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் பலாங்கொடை பிரதேச செயலக காரியாலயத்திற்கு அறிவித்திருக்கிறார்.
இதையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதனை வாபஸ் பெறுமாறு கோரி நேற்றையதினம் குறித்த தாயார் பலாங்கொடை பிரதேச செயலாளர் காரியாலயத்திற்கு முன்பாக உள்ள 100 அடி உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும் வசிப்பதற்கு வேறு இடம் இல்லை என போராட்டத்திலீடுபட்ட தாயார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM