இலங்கை தனது புதிய வெளியுறவுக் கொள்கைத் திட்டமாக “இந்தியாவின் முதல் அணுகுமுறையை” கடைப்பிடித்து புதுடில்லியின் மூலோபாய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாக்கும் என்று இலங்கையின் வெளியுறவு செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து, அட்மிரல் கொலம்பகே ஆகஸ்ட் 14 ஆம் திகதி இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பத்திரிகையொன்று அளித்துள்ள விசேட செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய பிராந்திய வெளியுறவு கொள்கையை இலங்கை தற்போது கொண்டுள்ளது. எனவே, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் இலங்கை செய்யாது.
பிராந்திய பாதுகாப்பில் முக்கிய அம்சமாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிப்பார். சீனா இரண்டாவது பெரிய பொருளாதார நாடு, இந்தியா 6 ஆவது பெரிய பொருளாதார நாடு. கடந்த 2018 இல் உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டிய நாடாக இந்தியா இருந்தது.
இந்த இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு மத்தியில் நாங்கள் இருக்கிறோம். இலங்கையை யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலைக்கு வாங்கவும் கூடாது. வேறு எந்த நாட்டிற்கு எதிரான செயல்களை செய்ய குறிப்பிட்ட நாட்டை ஒரு தளமாக பயன்படுத்த முடியாது.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக. கிழக்கு துறைமுகத்தில் ஹம்பன்தோட்டாவில் சீனா முதலீடு செய்துள்ளது. இங்கு இந்தியா ஆர்வம் காட்டாததால் அந்த முதலீட்டை சீன நிறுவனம் பெற்றது. இதை வணிக நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM