தாய், மனைவி இருவரையும் கொன்றதாக ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் விளையாட்டு வீரர் இக்பால் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப்பதக்கம் வென்றவர். 62 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணம் டெலாவேர் கவுண்ட்டியில் வசிப்பவராவார்.
மனைவியையும் தாயாரையும் கொன்றதாக அவரே ஒப்புக் கொண்டார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இக்பால் சிங் வீட்டுக்கு போலீஸ் வந்த போது இக்பால் சிங் இரத்தத்தில் நனைந்திருந்தார். மேலும், தன்னைத்தனே கத்தியால் குத்திக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் உள்ளே இரண்டு பெண்களின் சடலங்கள் தெரிந்ததையடுத்து, இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை என்பதாலும், செயலின் கொடூரத்தன்மையினாலும் இவருக்கு பிணை மறுக்கப்பட்டது. வழக்கறிஞர் வைத்துக் கொண்டதாக தெரியவில்லை.
தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அங்கு போலீஸ் காவலிலேயே இருந்துள்ளார். தாயார் நசீப் கவுர் தொண்டையை அறுத்தும், மனைவி ஜஸ்பால் கவுர் தொண்டை அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
மேலும், சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்தனர். ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னமும் தெரியாத நிலையில், இக்பால் சிங் கொலையை செய்து விட்டு தன் மகனுக்கு தொலைபேசியில், நான் உன் அம்மாவையும் பாட்டியையும் கொலை செய்து விட்டேன், போலீஸைக் கூப்பிடு என்று கூறியுள்ளார். பிறகு மகளையும் அழைத்து இதே போல் பேசியுள்ளார் இக்பால் சிங். அப்போதுதான் வீட்டுக்கு வந்த போது இக்பால் சிங் செய்த கொடுஞ்செயல் தெரியவந்தது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM