பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால், நேற்று (26) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கை - இங்கிலாந்துக்கிடையிலான ஒத்துழைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அண்மைய தேர்தல் வெற்றிக்கு இங்கிலாந்தின் வாழ்த்துக்களை தெரிவித்த லிசா வான்ஸ்டால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மிகவும் வலுவான ஆணையை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு இலங்கையருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் ஐந்தாண்டு நோக்கத்தைக் குறிப்பிட்டு, பாதுகாப்பான குடிநீர் துறையில் ஒத்துழைப்புகளை பரிசீலிக்குமாறு பிரதமர் உயர் ஸ்தானிகரைக் கேட்டுக்கொண்டார்.
இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதில் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் ரணில் ஜெயவர்தனவும் ஆர்வமாக உள்ளதாகவும், பரஸ்பர நலனுக்காக வியாபாரம் செய்வதில் எளிதாக விவாதிக்க விரும்புவதாகவும் உயர் ஸ்தானிகர் வான்ஸ்டால் தெரிவித்தார்.
அத்துடன் துறைமுக நகரத்தின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இலங்கை அதன் மூலோபாய இருப்பிடத்தின் நன்மையை முதலீட்டை ஈர்க்க பயன்படுத்தலாம் என்பதை லிசா வான்ஸ்டால் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசுமை நிதி, பல்லுயிர், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நிலையான விவசாயம் உள்ளிட்ட விடயங்கள் மீதும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM