சங்கவி பிலிம்ஸ் நிறுவன பணிப்பாளர் துரைராசா சுரேஸின் தயாரிப்பில் உருவாகவுள்ள வேலி எனும் தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப விழா எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு களனி சரசவி ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு அதிதியாக இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷர்மிளாவின் இதயராகம் எனும் திரைப்பட தயாரிப்பாளரான கலாபூஷணம், கலைமாமணி பேராதனை ஏ.ஏ. ஜூனைதீன் இத் திரைப்படத்தை எழுதி இயக்கவுள்ளார் என திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் எம்.கே. சுதாகர் , கலைஞர் லண்டன் ரஞ்சன், கே. ஈஸ்வரலிங்கம் ஆகியோரின் கீழ் வேல் திரைப்படத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையின் தமிழ் நடிக, நடிகைகள், ஒப்பனையாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு திரைப்படக் குழுவினால் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM