(எம்.ஆர்.எம்.வஸீம்)
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு, மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுகான திசைமுகப்படுத்தல் செயலமர்வு பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொதுத் தேர்தலின் மூலம் பல வருடகாலங்களுக்கு பின்னர் பரிபூரணமான பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் அனைவரும் கடந்த 5மாதங்களாக பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி வந்திருக்கின்றனர்.அதனால் புதிதாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் தொடர்பாக சிறந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.
அத்துடன் நாட்டில் இதுவரை காலமும் தீர்த்துகொள்ள முடியாத பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே மக்கள் பாரிய வெற்றியை எமக்கு தந்திருக்கின்றனர். விசேடமாக அரசியலமைப்பில் பல முரண்பாடுகளை கடந்த காலங்களில் எமக்கு காணமுடிந்தன. அவை அனைத்தையும் தீர்த்துக்கொள்ளவேண்டி இருக்கின்றன. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படாதவகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதனால் மக்கள் பாரி எதிர்பார்ப்புடனே எங்களை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு கொஞ்மேனும் பாதிப்தை ஏற்படுத்தாதவகையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். அன்றாட நடவடிக்கைகளைப்போல் எதிர்கால நடவடிக்கைகளின்போதும் எம்மால் தவறுகள் எதுவும் இடம்பெறாமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். அதற்காகவே புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான கருத்தரங்களை நடத்தி பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படை தெளிவூட்டல்களை மேற்கொள்கின்றோம் என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM