பிலிப்பைன்ஸில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 11 பேர் பலியாகியுள்ளதோடு 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் இராணுவ அமைச்சகம் குறிப்பிடுகையில்,
“பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள சுலு மாகாணத்தின் பரப்பான சந்தைப் பகுதியிலும், சர்ச் பகுதியிலும் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட அடுத்தடுத்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்ளில் 17 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு 12 மணியளவிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு ஒரு மணியளவிலும் இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டாவது குண்டுவெடிப்பை பெண் ஒருவர் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் குண்டுவெடிப்பில் பொதுமக்களும், இராணுவ வீரர்களும் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதுடன் இந்தத் குண்டுவெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM