(செய்திப்பிரிவு)
காலி சிறைச்சாலையினுள் வீசுவதற்காக சட்ட விரோதமான முறையில் புகையிலை பொதி, கைத்தொலைபேசிகள் 2 மற்றும் மின்னேற்றி ஆகியவற்றை தம்மிடையே மறைத்து வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி - அம்பலன்வத்த பகுதியைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காலி புகையிரத நிலையத்திற்கருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை கைது செய்து சோதனைக்கு உட்படுத்திய போதே 10 புகையிலை பொதிகள், 2 கைத்தொலைபேசிகள் மற்றும் மின்னேற்றி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சந்தேகநபர் காலி புகையிரத நிலைய மதில் சுவரின் மேலால் சிறைச்சாலை உள்ளே குறித்த பொருட்களை எறிவதற்காக கொண்டு வந்திருந்ததாகவும் ஏற்கனவே பல தடவைகள் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் சிறையில் இருந்தவரெனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM