(எம்.மனோசித்ரா)
சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற சட்ட விரோத செயற்பாடுகளை முற்றாக கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கேற்ப கொழும்பிலுள்ள 3 சிறைச்சாலைகளில் இன்று முதல் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய குறிப்பிடுகையில்,
வெலிக்கடை , மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலை ஆகியவற்றிலேயே பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏனைய பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய சிறைச்சாலைகளிலிருந்து முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக துரிதமாக செயற்படக்கூடிய அதிகாரிகளை சிறைச்சாலை திணைக்களம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படைக்கு நியமித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணர்தன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு சிறைச்சாலைகளில் தற்போதுள்ள முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும், மோசமான குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள பூச மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM