தெற்கு பிலிப்பைன்ஸ் நகரமான ஜோலோவில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்தியதாக கூறப்படும் வெடிப்பு சம்பவத்தில் குண்டுதாரி உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 34 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் தென்கிழக்கு மாகாணங்களில் ஒன்றான ஜோலோவின் தலைநகரில் திங்களன்று சுமார் பிற்பகல் (04:00 GMT) இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கத் தலைவர் ரிச்சர்ட் கார்டன் தெரிவித்தார்.
ஜோலோவில் உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகம் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 11 காலாட்படைப் பிரிவின் சிவில் இராணுவ உறவுகள் அதிகாரி லெப்டினன்ட் கேணல் ரொனால்ட் மேடியோ, அந் நாட்டு செய்திச் சேவையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM