மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புக்கனை பகுதியில் வைத்து 62 கிலோவுக்கும் அதிகமானளவு மரை இறைச்சியடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தல விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று சனிக்கிழமை முற்பகல் கும்புக்கனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 62 கிலோ 400 கிராம் அளவிலான மரை இறைச்சி மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொனராகலை வனஜீவராசிகள் திணைக்களத்pல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கும்புக்கனை - மொனராகலை பகுதியைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM