துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Published By: Jayanthy

23 Aug, 2020 | 11:11 PM
image

அக்கரைப்பற்று - ஒலுவில் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சனிக்கிழமை 6.30 மணியளவில் ஒலுவில் பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர 12 ரக துப்பாக்கிகள் 2, உள்நாட்டு போர 12 ரக துப்பாக்கி 1, துப்பாக்கி ரவைகள் 20 மற்றும் வெற்று துப்பாக்கி ரவைகள் 32 ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அஸ்ரப் நகர் - ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 55 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44