அக்கரைப்பற்று - ஒலுவில் பகுதியில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சனிக்கிழமை 6.30 மணியளவில் ஒலுவில் பகுதியில் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போர 12 ரக துப்பாக்கிகள் 2, உள்நாட்டு போர 12 ரக துப்பாக்கி 1, துப்பாக்கி ரவைகள் 20 மற்றும் வெற்று துப்பாக்கி ரவைகள் 32 ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அஸ்ரப் நகர் - ஒலுவில் பகுதியைச் சேர்ந்த 22 மற்றும் 55 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 ஆம் திகதி சனிக்கிழமை அக்கரைப்பற்று மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM