மனைவியுடன் தகராறு : நஞ்சருந்திய கணவர் தற்கொலை

Published By: Raam

09 Dec, 2015 | 04:22 PM
image

அளவெட்டி பகுதியில் மதுப் போதையில் மனைவியுடன் சண்டைப் பிடித்துக் கொண்டு நச்சருந்திய நபர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

சிவஞானம் ஞானபிரகாசம் என்ற 46 வயது நிரம்பிய இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நஞ்சு மருந்தை உட்கொண்ட அவரை உறவினர்களும்,அயலவர்களும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல முற்பட்ட போதும் அவர் அதற்கு இணங்கவில்லை. இதனையடுத்து  நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்து குறித்த நபர்  பலவந்தமாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக நேற்று பிற்பகல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சிவஞானம்  சிகிச்சை பலனின்றி  நேற்றிரவு 8 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04