(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தாய்லாந்தில் வெவ்வேறு நரகங்களில் சிக்கியிருந்த 87 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பௌத்த மத குருமார்கள் , சிறுவர்கள் , குறுகிய கால சுற்றுலா வீசாவில் தாய்லாந்திற்கு சென்றிருந்தவர்கள் உள்ளிட்ட பல இலங்கையர்கள் கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று அதிகாலை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விஷேட விமானம் இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு பயணித்த போது நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து பிரஜைகளையும் முன்னரே தாய்லாந்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்றிருந்த இலங்கைப் பிரஜைகளையும் அந்நாட்டுக்கு ஏற்றிச் சென்றது. இலங்கையிலுள்ள தாய்லாந்து தூதரகம் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM