தாய்லாந்தில் சிக்கியிருந்த 87 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Published By: Digital Desk 3

21 Aug, 2020 | 02:53 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக தாய்லாந்தில் வெவ்வேறு நரகங்களில் சிக்கியிருந்த 87 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பௌத்த மத குருமார்கள் , சிறுவர்கள் , குறுகிய கால சுற்றுலா வீசாவில் தாய்லாந்திற்கு சென்றிருந்தவர்கள் உள்ளிட்ட பல இலங்கையர்கள் கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று அதிகாலை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஷேட விமானம் இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கு பயணித்த போது நாட்டில் தங்கியிருந்த தாய்லாந்து பிரஜைகளையும் முன்னரே தாய்லாந்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்றிருந்த இலங்கைப் பிரஜைகளையும் அந்நாட்டுக்கு ஏற்றிச் சென்றது. இலங்கையிலுள்ள தாய்லாந்து தூதரகம் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38