( இராஜதுரை ஹஷான்)
ஊழியர்கள் சேவையின் போது உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் 5 இலட்சம் நஷ்டஈடு போதுமானதாக அமையாது. எனவே அந்தத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தொழிலாளர் திணைக்கள தொழிலாளர் ஆலோசனை சபையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பணியில் ஈடுபட்டுள்ள குடும்பத் தலைவரொருவர் சேவையின் போது உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு அந்த குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமாகாது . ஆகவே 5 இலட்சம் நட்டஈட்டுத் தொகையை 20 இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ளார்கள். தனியார் நிறுவனங்களில் இந்நிலைமை அதிகளவில் காணப்படுகிறது.
நெருக்கடியான சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை சேவைகளில் இருந்து நீக்காமல் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ள சேவையாளர்களுக்கு நியாயம் வழங்கப்படும். சேவையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்துடன் தொழிற்துறைகளை மேம்படுத்துவற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளர் நலன் பேணும் சட்டங்கள் நடைமுறைக்கு பொருந்தும் வகையில் மறுசீரமைக்கப்படும். தொழிற்துறைகளுக்கு தற்போது காணப்படும் போட்டித்தன்மையை குறைப்பதற்கு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களை ஒன்றுப்படுத்திய ஒழுங்கமைக்கப்பட்ட கொள்கை தயார் செய்யப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM