இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாறு வலைதள தொடராக உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரும், இந்திய வங்கிகளில் 9000 கோடிக்கு மேல் கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்து அங்கு வாழ்க்கையும், தம்மீதான வழக்கையும் நடத்தி வருபவர் விஜய் மல்லையா. இவரது வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் கிரி பிரகாஷ், 'the Vijay mallya story' என்ற பெயரில் நூலாக எழுதி, 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இவரின் சுயசரிதை வலைதள தொடராக தயாராகவிருக்கிறது.
தெலுங்கு, கன்னடம், இந்தி , தமிழ் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவிருக்கும் இந்த வலைதள தொடரில், விஜய் மல்லையாவாக நடிப்பதற்கு முன்னணி நட்சத்திரம் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைகளும், சாகசங்களும், சாதனைகளும் நிறைந்த விஜய் மல்லையாவின் வாழ்க்கை வரலாற்றில், விஜய் மல்லையாவை நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தற்போதே இணையவாசிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM