(செய்திப்பிரிவு)
தங்க ஆபரண கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது,
கொடவில
கொடவில - கம்புறுகமுவ பிரதேசத்தில் கொடவிட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த புதன்கிழமை வீடொன்றில் தங்கநகை கொள்ளை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரென பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடமிருந்து அவரால் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. கம்புறுகமுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தலங்கம
தலங்கம - கலபலுவாவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்ற 30,000 ரூபா பணத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்;.
தலங்கம பொலிஸார் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து 100 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் விற்பனை மூலம் பெற்ற பணம் 30,000 ரூபா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொரள்ளை பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பாலத்துறை
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்துறை பிரதேசத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM