வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் ஒரு பகுதிகளை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, விக்னேஸ்வரனின் கருத்தானது இலங்கையின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று குற்றஞ்சாட்டியே இந்த கோரிக்கையினை அவர் சபாநாயகரிடத்தில் முன் வைத்துள்ளார்.
இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்திற்குள் நுழைந்தபோது உறுதிமொழி அளித்த விக்னேஸ்வரன், தனது முதல் உரையில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் தேசம் என்ற அடிப்படையில் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு செயலுக்கும் அதன் எதிர்வினை இருக்கும் என்றும் அவர் கூறி, இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகவும் மனுஷ நாணயக்கார சுட்டிகாட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM