(செய்திப்பிரிவு)
கிளிநொச்சி மற்றும் அம்பகஹவெல்ல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது 52 கிலோ 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி - பரந்தன் பிரதேசத்தில் 49 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பரந்தன் - முரசுமோட்டை பகுதியைச் சேரந்த 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வியாழனன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்பாறை
அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல்களின் அடிப்படையில் வியாழக்கிழமை இங்கிணியாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹவெல்ல பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 3 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாகப் பொரிஸார் தெரிவித்தனர்.
பரகஹகெலே - அம்பகஹவெல்ல பகுதியைச் சேரந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM