ஹெரோயினுடன் புத்தளத்தில் சிக்கிய ஐவர்

Published By: Digital Desk 4

21 Aug, 2020 | 12:39 PM
image

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் ஹெரோயின், மாவா மற்றும் ஒருதொகை பணம் என்பவற்றுடன் நேற்று வியாழக்கிழமை (20) ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் கல்லடி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மாவா , இரண்டு புகையிலை பக்கெட்டுகள் , 60 ஆயிரம் ரூபா பணம் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட  மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01