நாடு முழுவதும் தொடர்ச்சியாக நான்கு தினங்களாக அமுல்படுத்தப்பட்ட தினமும் ஒரு மணி நேர மின்வெட்டு நாளை முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கோளாறு காரணமாக அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் நாடு தழுவிய ரீதியில் மின்சார விநியோகமானது தடைப்பட்டது.
பின்னர் இந்த கோளாறுகள் ஓரளவுக்கு சீரமைக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் அனைத்து பகுதிகளுக்குமான மின்சார விநியோகமானது இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான மின் இணைப்பின் பரிமாற்றத்தை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்றும் கூறப்பட்டிருந்தது.
விசையாழிகள் குளிர்ச்சியடையும் வரை மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் அதன்போது சுட்க்காட்டியிருந்தார்.
இதனால் இலங்கை மின்சார சபைக்கு தேவையான மின் அளவு கிடைக்காதமையினால் கடந்த செவ்வாயக்கிழமை முதல் இன்று வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பகுதி பகுதியாக மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது.
இந் நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முக்கிய எரிசக்தி ஜெனரேட்டர்கள் இன்று முதல் தேசிய மின் கட்டத்தில் சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக மின்சார விநியோகமானது நாளை முதல் வழமைபோல் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டின் பரந்த மின் தடை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையம் கெரவலபிட்டி துணை மின்நிலையம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றை இன்று ஆய்வு செய்யும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM