நாளை முதல் மின்சார விநியோகம் வழமை நிலைக்கு

Published By: Vishnu

21 Aug, 2020 | 08:49 AM
image

நாடு முழுவதும் தொடர்ச்சியாக நான்கு தினங்களாக அமுல்படுத்தப்பட்ட தினமும் ஒரு மணி நேர மின்வெட்டு நாளை முதல் அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கோளாறு காரணமாக அன்றைய தினம் பிற்பகல் 12.30 மணியளவில் நாடு தழுவிய ரீதியில் மின்சார விநியோகமானது தடைப்பட்டது.

பின்னர் இந்த கோளாறுகள் ஓரளவுக்கு சீரமைக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் அனைத்து பகுதிகளுக்குமான மின்சார விநியோகமானது இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

எனினும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பிரதான மின் இணைப்பின் பரிமாற்றத்தை மீட்டெடுக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

விசையாழிகள் குளிர்ச்சியடையும் வரை மின் நிலையத்தை மீண்டும் இயக்க முடியாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் அதன்போது சுட்க்காட்டியிருந்தார்.

இதனால் இலங்கை மின்சார சபைக்கு தேவையான மின் அளவு கிடைக்காதமையினால் கடந்த செவ்வாயக்கிழமை முதல் இன்று வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு பகுதி பகுதியாக மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முக்கிய எரிசக்தி ஜெனரேட்டர்கள் இன்று முதல் தேசிய மின் கட்டத்தில் சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக மின்சார விநியோகமானது நாளை முதல் வழமைபோல் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் பரந்த மின் தடை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையம் கெரவலபிட்டி துணை மின்நிலையம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றை இன்று ஆய்வு செய்யும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47