அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று கல்விகற்று பட்டம்பெற்ற 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அண்மையில் அரச வேலைவாய்ப்பிற்காக தெரிவுசெய்யப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளிற்கான பெயர்பட்டியல் அரசினால் வெளியிடப்பட்டிருந்ததுடன், நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் விபரங்களும் அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தவகையில் இலங்கை போரின் போது இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு சென்று அங்குள்ள பல்கலை கழகங்களில் படித்து பட்டம் பெற்று மீண்டும் நாடு திரும்பியவர்களின் விண்ணப்பங்களும் குறித்த பட்டியலில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் 27, வவுனியா 18, யாழ்ப்பாணம் 66, முல்லைத்தீவில் 2 பேருமாக மொத்தம் 113 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பட்டம் என்ற காரணத்தை முன்வைத்தே அவர்களிற்கான தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன். பல்வேறு பாதிப்புகளை சந்தித்து அகதிகளாக சென்று கஸ்டத்தின் மத்தியில் படித்து பட்டம் முடித்து தாய் நாடு திரும்பிய நிலையிலும் தமது தொழில் வாய்ப்பு தட்டிக்களிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM