இலங்கையில் 2020 ஆம் ஒகஸ்ட் 05ம் நடைபெற்று முடிந்த தேர்தல் மூலம் தெரிவான அராங்கமானது அதிகளவிலான வைத்தியர்களை நியமித்துள்ளமை சிறப்பான விடயமாகும்.
இதன்படி 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையானது நவீன வடிவமைப்பில் பாரிய இடவசதியுடன் கட்டப்பட்ட வைத்தியசாலையாக விளங்குகின்றது.
அந்த வகையில் இவ்வைத்தியசாலையில் சுமார் 167 கட்டில்கள் கொண்ட விசாலமான இடவசதியும் காணப்படுகின்ற போதிலும் இங்கு நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கும் வீதமானது மிகவும் குறைவாகவே காணப்படுவது வருந்தத்தக்க விடயமாகும். போதியளவிலான வைத்தியர்களை ஏற்படுத்தி தருவதனூடாக இந்நிலையை மாற்றியமைக்க கூடியதாக இருக்கும்.
இதன்படி மகப்பேற்று வைத்தியர் ஒரு நாளும், விசேட வைத்தியர் ஒரு நாளும், சத்திரசிகிச்சை வைத்தியர் ஒருநாளும், பொது வைத்திய நிபுணர் ஒருநாளும், கண், காது விசேட வைத்தியர் ஒருநாளைக்கும் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் வாரத்திற்கு ஒருமுறை நியமிக்கபடுவார்களானால், இங்கு வசிக்கும் 100,000 ற்கும் மேற்பட்ட மக்கள் தமது நோய்களுக்கான தீர்வை பெற்று சுகாதாரத்தினை பேண கூடியதாக இருக்கும்.
மேலும், சிவனொளிபாதமலையில் பருவகாலத்தில் தரிசிக்க செல்வோருக்கும் இந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதனுடன் போதுமான அளவு இடவசதிகள் காணப்பட்ட போதிலும் கருவிகள் பல இல்லாமையின் காரணமாக இவ்வைத்தியசாலையில் மகப்பேறு இடம்பெறுவதும் முற்றாக இல்லாது போயுள்ளதுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட அறைகள் வெறுமையாக காட்சியளிப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
எனினும், ஆரம்ப கட்டத்தில் அதிகளவிலான மகப்பேறுகள் இடம்பெற்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.
எனவே,அரசானது இதனை கவனத்தில் எடுத்து தேவையான கருவிளை வழங்குவதன் ஊடாக வைத்திய சேவைகளை தடையின்றி வழங்க உதவ வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர். எனவே, தற்போது கடமைகளை ஏற்றுள்ள புதிய சுகாதார அமைச்சானது இவற்றை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM